Tuesday, June 28, 2011

தேனீக்களை மறந்ததால் குறைந்து வரும் விவசாயம்

   தேனீக்கள் நமக்கு உற்ற நன்பன் என்பதை இதற்கு முன் இரண்டு இடுகையில் கூறியுள்ளேன். அதன் அவசியத்தை அது நமக்கு, எப்படி உதவி புரிகிறது என்பதையும் கூறியிருந்தேன் அதை மறந்ததால் உணவு உற்ப்பத்தி எப்படி குறைகிறது என்பதை பார்ப்போம்.
   விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் உற்ற நண்பனாக விளங்கும் தேனீக்களை விவசாயிகள் மறந்ததால், விளைச்சலும் குறைந்து வருகிறது. இந்தியாவின் தேன் உற்பத்தியில் பஞ்சாப் மாநிலமும், தமிழகத்தில் கன்னியாகுமரி வட்டமும்
முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் மாவட்டங்கள் தோறும் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தேன் உற்பத்தியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை.
   தேனீக்கள் சூரியகாந்தி, பருத்தி, புளி, வேம்பு, தைலமரம், மிளகாய், புங்கமரப் பூக்களிலும், ரப்பர் இலைகளில் இருந்தும் தேனை பெறுகின்றன. தென்னை, செம்பருத்தி, ரோஜாப்பூக்களில் இருந்து மகரந்தங்களை
   சேகரிக்கின்றன. மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற வாசனைப் பூக்களில் தேன், மகரந்தம் கிடைப்பதில்லை. தமிழகத்தில் பரவலாக வேம்பு, புளிய மரங்கள் காணப்படுகின்றன. தென்னை, மா, புளி, வேப்பந்தோப்புகளில் தேனீக்களை பெட்டிகளில் வைத்து வளர்த்தால், பூக்களில் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு, உற்பத்தியும் 30 சதவீதம் வரை அதிகரிக்கும். வளர்ப்பது எளிது: இந்திய தேனீக்களை வளர்ப்பது மிகவும் எளிது. மூன்றடுக்கு கொண்டு சிறிய பெட்டியில் தேனீக்களை வளர்க்கலாம்.
   பூக்கும் காலத்தில் 15நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் இரண்டு கிலோ தேன் வரை எடுக்கலாம். தேனீக்கள் மூன்று கிலோமீட்டர் சுற்றளவு வரை சென்று தேனை சேகரிக்கும்.
   விவசாயத்தோடு, தேன் மூலமும் வருமானமும் கிடைக்கும். கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தில் தேனீக்களை கையாளும் தொழில்நுட்ப நிபுணர்கள் பணிபுரிவதால், அவர்களைக் கொண்டு விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்க வேண்டும். விவசாயப் பல்கலை மற்றும் விவசாயத் துறை இதற்கான முயற்சியை துவக்க வேண்டும்.

நன்றி தினமலர்...

வனவிலங்குகள், பறவைகள் பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

No comments: